கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை

கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து பயணம் மேற்கொள்ள அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை
x
கொரோனா வைரஸ் பரவுவதால் பிரேசிலில் இருந்து பயணம் மேற்கொள்ள அமெரிக்கா தடை விதித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செயலாளர் கெய்லீ மெக்னானி  வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவை பாதுகாப்பதற்கான அதிபர் டிரம்பின் நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். 14 நாட்களுக்கு முன்பு பிரேசில் சென்ற பிற நாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என கெய்லீ மெக்னானி  குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரிட்டன், ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள தடை உள்ள நிலையில், அந்த பட்டியலில் தற்போது பிரேசில் நாட்டை அமெரிக்கா சேர்த்திருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்