மாஸ்கோ உயிரின பூங்காவில் வயதான முதலை உயிரிழப்பு...
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியிலிருந்து ரஷ்யா கொண்டு வரப்பட்ட வயதான முதலை மாஸ்கோவில் உள்ள விலங்கின பூங்காவில் உயிரிழந்தது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியிலிருந்து ரஷ்யா கொண்டு வரப்பட்ட வயதான முதலை மாஸ்கோவில் உள்ள விலங்கின பூங்காவில் உயிரிழந்தது. 1943 ஆண்டு வெடிகுண்டு தாக்குதலின் போது பெர்லின் நகர உயிரியல் பூங்காவில் இருந்து அந்த முதலை தப்பித்து சென்றதாகவும், பின்னர் பிடிபட்ட அந்த முதலையை பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் ஒப்படைத்ததாகவும் மாஸ்கோ விலங்கின பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாட்டர்ன் என்று பெயரிடப்பட்ட அந்த முதலை உயிருடன் இருந்த போது கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
Next Story