இலங்கைக்கான இந்திய தூதராக கோபால் பாக்லே பதவியேற்பு - அதிபர் கோட்டாபய ராஜபக்ச உடன் காணொலி மூலம் ஆலோசனை
இலங்கைக்கான இந்திய தூதராக கோபால் பாக்லே பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கைக்கான இந்திய தூதராக கோபால் பாக்லே பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் கொழும்புவில் பதவியேற்ற அவர், காணொலி மூலம் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடினார். அப்போது, தெற்காசியா பிராந்தியத்தில் இந்தியா - இலங்கை உறவை மேம்டுபடுத்த, தாம் உறுதி கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கைக்கு இந்தியா சார்பில் 25 டன் அளவிலான மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story