சிகாகோவில் கொரோனா பரவியது எப்படி? - அமெரிக்க அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை
தமக்கு கொரோனா இருப்பது தெரியாமலே பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட நபரால் 15 பேருக்கு கொரோனா பரவியதுடன் அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
* கொரோனா நோயின் தனித்தன்மையே அதன் பாதிப்பை உணர்ந்து கொள்ளும் முன்பே பலருக்கும் பரவி விடுவதுதான். இதனால் தான் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் முன்னரே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அமெரிக்காவில் நோய்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்பு அளித்துள்ள அறிக்கையில் கொரோனா பரவிய விதம் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
* பிப்ரவரி மாதத்தின் பின்பாதியில் அமெரிக்கா தங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பிக் கொண்டிருந்த நாட்களில் அங்கு கொரோனா பரவிய விதத்தை விவரிக்கிறது அந்த அறிக்கை.
Next Story