ரோமானியா நாட்டில் சிக்கி தவிக்கும் 120 இந்தியர்கள் - உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ரோமானியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 120 பேரை மீட்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ரோமானியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 120 பேரை மீட்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிதம்பரத்தை அடுத்த அம்பிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்,செந்தில் உள்ளிட்ட 4 பேர் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கட்டி ரோமானியா சென்றதாகவும், ஆனால் வேலையின்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் 120 பேர் ரோமானியா நாட்டில் சிக்கி தவிப்பதாகவும், தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Next Story