கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த சீனா: மருத்துவர்களை கவுரவித்த சீன அரசு

உயிர் காத்த மருத்துவர்களை சீன அரசு கவுரவிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த சீனா: மருத்துவர்களை கவுரவித்த சீன அரசு
x
கடந்த இரண்டு மாதமாக  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ningxia பகுதியை சேர்ந்த மருத்துவ குழுவினர் மூவாயிரத்து 700 பேர், வுஹான் நகரில் இருந்து  தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். இருசக்கர வாகனத்தில் போலீசார் முன்னர் செல்ல, பின்னால் பேருந்து மூலம் விமான நிலையம் அழைத்து செல்லப்பட்ட  மருத்துவர்களை வழி நெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் சளியுட் அடித்து வழி அனுப்பினர். விமான நிலையத்தின் வாசலில் மக்களின் கைத்தட்டுதலுடன் மருத்துவ குழுவினர் வரவேற்கப்பட்டனர். அவர்களது பயணத்தை மேலும் சிறப்பிக்கு வகையில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்ற உருவம் விமான டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்டிருந்தது..


Next Story

மேலும் செய்திகள்