பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய இத்தாலி - ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் பலி

கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய இத்தாலி - ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் பலி
x
கொரோனா வைரஸ் இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில், மிக வேகமாக பரவி வருகிறது. இத்தாலியில், நேற்று முன்தினம் மட்டும், 475 பேர் பலியாயினர். அதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை, 3 ஆயிரத்து 405 ஆக  உயர்ந்துள்ளது. அங்கு, 41 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு, வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
ஆறு கோடி பேர், மக்கள் தொகை கொண்ட இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம், இத்தாலியை விட இருபது மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனாவினால் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இறப்பு விகிதத்தில், சீனாவை இத்தாலி மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்