நாடு முழுவதும் மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்த மோடி - கொரோனாவை வெல்லுமா இந்தியா?

சீனாவில், கொரோனாவின் தாக்கம் முற்றிலும் குறைந்து விட்ட நிலையில், இத்தாலியில் அதன் தாக்கம் அதிரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன
நாடு முழுவதும் மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்த மோடி - கொரோனாவை வெல்லுமா இந்தியா?
x
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் துவக்கிய ஆட்டம் உலகில் எந்த நாடையும் தற்போது விட்டு வைக்கவில்லை. 

விரைவாக பரவிய புதிய ரக கொரோனா வைரஸால்,  சீனர்கள் ஓர் அசாதாரண நிலையை அனுபவித்தார்கள்.

கொரோனா தொற்றை, தனிமைப்படுத்தும் விதமாக கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி, வூகான் நகரை மூட சீன அரசு உத்தரவிட்டது. 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மக்கள் தாங்களாகவே, வீட்டில் தங்கினர். வெளியே போக வேண்டிய நிலையில் முகக்கவசம் அணிந்து சென்றனர். சுகாதார நடைமுறைகளை அரசுடன் இணைந்து மக்கள் முழுமையாக கடைபிடித்தனர்.

மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதால் வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறையும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு தெருவுக்கு ஒரு நிர்வாக
அலுவலகம் அமைக்கப்பட்டது. அதன் கீழே, ஒரு குழு அமைக்கப்பட்டு, வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

நாள்தோறும் குடியிருப்பு பகுதியில் மூன்று முறை கிருமிகளை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டாலே, அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தினர்.

மக்கள் எல்லோரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்ஙகி வீட்டிலேயே தங்கினர்.

சீன அரசு எடுத்த நடவடிக்கைகளால் நோய் தொற்று கொண்டோரின் எண்ணிக்கை மார்ச் 10க்கு பின் தற்போது வெகுவாக குறைந்து விட்டது.

கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸ், பரவலை, கட்டுப்படுத்த இத்தாலி அரசு மேற்கொண்ட முயற்சிகளை, அந்நாட்டு மக்கள் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு உயிரிழப்பு சீனாவையே மிஞ்சியுள்ளது. 

இதனிடையே, சீனா வழியில் தற்போது இந்தியாவும் கொாரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. 

இது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வருகிற ஞாயிறன்று, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் சமூக நிகழ்வுகளில் பங்கெடுக்காமல், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதன் மூலம், கொரோனா வைரசை, பரவுவதை வெகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதே நம் இந்திய அரசின் நம்பிக்கையாக உள்ளது. 

நாடு நலம் பெற அரசின் வேண்டுகோளுக்கு செவி கொடுக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.



Next Story

மேலும் செய்திகள்