கொரோனா வைரஸ் : சுமார் 8000 பேர் பலி - உலக சுகாதார மையம் அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் : சுமார் 8000 பேர் பலி - உலக சுகாதார மையம் அறிவிப்பு
x
ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ், கொரோனா வைரஸ் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மற்றும் பலியானவர்களில் 80 சதவீதம் பேர், மேற்கு பசிபிக் மற்றும் ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர் விவரித்தார். இந்நோய் பரவுவதை தடுக்க, தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு சோதனை, மருத்துவம், தொடர் மருத்துவம் என்ற பாணியை கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சீனாவில் இந்த நோய் தாக்கிய பிறகே அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்