"கொரோனாவால் இலங்கையை முடக்கப்போவதில்லை" - அதிபர் கோட்டாபய ராஜபக்சே

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இலங்கையை முடக்கப்போவதில்லை - அதிபர் கோட்டாபய ராஜபக்சே
x
இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா காரணமாக இலங்கையை ஒருபோதும் முடக்கப்போவதில்லை என அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதிபர் மாளிகையில் இதுகுறித்து உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஏனைய நாடுகளில் இடம்பெறாத இந்த வைரஸ் கட்டுப்படுத்தும் முயற்சிகளை இலங்கையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையை நிராகரித்ததோடு தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கே இருப்பதாக கூறினார்.

 


Next Story

மேலும் செய்திகள்