"நள்ளிரவு முதல் ஒரு கிலோ பருப்பு ரூ.65 - டின் மீன் ரூ.100" : இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அறிவிப்பு
இலங்கையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக, ஒரு கிலோ பருப்பு 65 ருபாய்க்கும், டின் மீன் ஒன்று 100 ரூபாய்க்கும் விற்பனை செய்ய அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக, ஒரு கிலோ பருப்பு 65 ருபாய்க்கும், டின் மீன் ஒன்று 100 ரூபாய்க்கும் விற்பனை செய்ய அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டு மக்களிடையே அவர் ஆற்றிய சிறப்பு உரையில் இந்த தகவலை தெரிவித்த அவர், இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார். அதேப்போல, எதிர்வரும் நாட்களில் ஏனைய மானியங்களும் வழங்கப்படுவதோடு, வங்கிக்கடனை வசூல் செய்வதை 6 மாதங்களுக்கு நிறுத்துமாறு கூறியுள்ள அவர், கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையின் போது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும் வலியுறுத்தினார்.
Next Story