இலங்கை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனப்பெண் நலம்...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, இலங்கையில் கொழும்புவில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண், குணமடைந்த நிலையில், தாய் நாட்டிற்கு அனுப்பப்பட்டார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, இலங்கையில் கொழும்புவில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண், குணமடைந்த நிலையில், தாய் நாட்டிற்கு அனுப்பப்பட்டார். ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த 43 வயதான பெண், இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டிருந்தார். கடந்த மாதம் 26ஆம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த பெண் குணமடைந்த நிலையில், இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டோர் மலர்ச்சென்டு கொடுத்து, அனுப்பி வைத்தனர்.
Next Story