ராணுவ காவலில் இருந்து தப்பிய தாலிபான் தீவிரவாதி : தகவலை உறுதி செய்த பாகிஸ்தான் உள்துறை

நோபல் பரிசை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவை கொலை செய்ய முயன்ற, தாலிபான் தீவிரவாதி ராணுவ காவலில் இருந்து தப்பி உள்ளார்.
ராணுவ காவலில் இருந்து தப்பிய தாலிபான் தீவிரவாதி : தகவலை உறுதி செய்த பாகிஸ்தான் உள்துறை
x
பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் கவிஞர் மலாலாவை 2013 ஆம் ஆண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தொடர்புடைய பாகிஸ்தானை சேர்ந்த தாலிபான் தீவிரவாதி ஈசானுல்லா, கைது செய்யப்பட்டு ராணுவத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார். மலாலா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்திய அவர் தமது ஆதரவாளர்கள் தான் அதை செய்ததாகவும் அறிவித்திருந்தார். அந்த சர்ச்சை ஓய்வதிற்குள், தாம் ராணுவ காவலில் இருந்து தப்பிவிட்டதாக டிவிட்டரில் பதிவிட்டதோடு, ஒலிப்பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். கடந்த ஒரு மாதமாக இது பற்றி கருத்து தெரிவிக்காமல், இருந்த பாகிஸ்தான் உள்துறை தற்போது, அந்த செய்தி உண்மை என்று தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்