சீனாவில் கொரோனாவால் ஒரே நாளில் 242 பேர் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 242 பேர் பலியானதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 242 பேர் பலியானதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. 14 ஆயிரத்து 840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் இது பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.
Next Story