மலேசியா செல்ல முயன்ற ரோஹிங்யா அகதிகள் - நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி

வங்க தேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 15 ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்தனர்.
மலேசியா செல்ல முயன்ற ரோஹிங்யா அகதிகள் - நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி
x
வங்க தேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், சிக்கி 15 ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில், அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ரோஹிங்யா அகதிகள் 130 பேர் வங்காள விரிகுடா வழியாக மலேசியா செல்ல முடிவு செய்தனர். 2 படகுகளில் சென்ற போது ஒரு படகு நடுக்கடலில் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணவில்லை என்பதால், அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்