மலேசியா செல்ல முயன்ற ரோஹிங்யா அகதிகள் - நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி
வங்க தேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 15 ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்தனர்.
வங்க தேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், சிக்கி 15 ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில், அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ரோஹிங்யா அகதிகள் 130 பேர் வங்காள விரிகுடா வழியாக மலேசியா செல்ல முடிவு செய்தனர். 2 படகுகளில் சென்ற போது ஒரு படகு நடுக்கடலில் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணவில்லை என்பதால், அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
Next Story