"இந்தியா, பாகிஸ்தான் இ​டையே சமரசம் செய்ய தயார்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைக்கு சமரசம் செய்ய ஆவலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இ​டையே சமரசம் செய்ய தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு
x
உலக பொருளாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ​டொனால்ட் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இருவரும் நேற்று சந்தித்து பேசினர். இருதரப்பு உறவு, வர்த்தகம் மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு சுமூகமாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் இருநாடுகள் இடையே சமரசம் செய்ய ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண மூன்றாவது  நபரின் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ள நிலையில், நான்காவது முறையாக டிரம்ப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்