ஸ்பெயினில் குளோரியா புயலுக்கு 3 பேர் பலி

குளோரியா புயலின் தாக்கம் ஸ்பெயின் நாட்டில் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
ஸ்பெயினில் குளோரியா புயலுக்கு 3 பேர் பலி
x
குளோரியா புயலின் தாக்கம் ஸ்பெயின் நாட்டில் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்த புயலால் கடும் சூறாவளி காற்று, அதிகமான பனிப் பொழிவு மற்றும் வெப்பநிலை ஜூரோ டிகிரிக்கு குறைவாக உள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வேலன்ஷியா மாகாணத்தில் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், 26 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புயலால் Alicante விமான நிலையம் மூடப்பட்டு உள்ளதால், 200 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்