"ஈரான் ராணுவம் அமெரிக்காவிற்கு பதிலடி" - மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் ராணுவம் அமெரிக்காவிற்கு பதிலடி - மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம்
x
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று புதிய ராணுவ தளபதி இஸ்மெயில் கானி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அல் அசாத் மற்றும் எர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 80க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் இறந்ததாக ஈரான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியதை  உறுதி செய்துள்ள அமெரிக்கா சேதம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என  தெரிவித்துள்ளது.  ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்