அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதல் - ஈரான் படை தளபதி உள்பட 7 பேர் பலி

அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஈரான் படைத்தளபதி கொல்லப்பட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதல் - ஈரான் படை தளபதி உள்பட 7 பேர் பலி
x
ஈரான் தலைநகர் பாக்தாத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ராணுவ தலைமையகமான பென்டகன் விளக்கம் அளித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு தீர்க்கமான தற்காப்பு நடவடிக்கையே இது என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சுலைமானி திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளது. இந்த வான்வழி தாக்குதலில் காசிம் சுலைமானி அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வந்த நிலையில் இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான புது மோதலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 



Next Story

மேலும் செய்திகள்