நியூசிலாந்தில் எரிமலை வெடித்த விபத்தில் 5 பேர் பலி, 20 பேர் படுகாயம்
நியூசிலாந்து நாட்டில் எரிமலை வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிமலை வெடித்து 5 பேர் பலி- 20 பேர் படுகாயம்
திடீர் எரிமலையால் சுற்றுலா பயணிகளின் படகு சேதம்
எரிமலை தீவில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
அந் நாட்டின், கடலோர பகுதியில் அமைந்துள்ளது வெள்ளைத் தீவு. எரிமலைகள் நிரம்பிய இந்த தீவை சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் படகுகளில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இதுபோல பயணம் செய்தபோது, திடீரென எரிமலை வெடித்தது. இதில் சிக்கி, 20 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். ஹெலிகாஃப்டர் மூலம் மீட்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனைவரும் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர்.
==
Next Story