நைஜீரிய கப்பலுடன் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் - கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்களை மீட்பது குறித்து நைஜீரிய அரசோடு பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நைஜீரிய கப்பலுடன் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் - கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்
x
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்களை மீட்பது குறித்து நைஜீரிய அரசோடு பேசி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி போனி தீவு அருகே சென்று கொண்டிருந்த நைஜீரிய நாட்டிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பலை கடற்கொள்ளையர் சிறைபிடித்தனர். அதில் 18 இந்தியர் உள்பட மொத்தம் 19 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார்  எண்ணெய்க் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்