இலங்கையில் அடைமழை நீடிப்பு - 5 பேர் உயிரிப்பு

இலங்கையில் 10 மாவட்டங்களில் நீடித்து வரும் அடை மழை காரணமாக ஆயிரத்து 480 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கையில் அடைமழை நீடிப்பு - 5 பேர் உயிரிப்பு
x
இலங்கையில் 10 மாவட்டங்களில் நீடித்து வரும் அடை மழை காரணமாக ஆயிரத்து 480 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீரற்ற கால நிலையினால்  5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப் பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, ரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு , அம்பாந்தோட்டை, திரிகோண மலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கனமழை நீடிக்கும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்