பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரனில் முடிவு
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொது தேர்தலுக்கு செல்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோல, பிரதமர் பதவியில் இருந்து விலகி விட்டு எதிர்க்கட்சி தலைவராக செயல்படவும் ரனில் விக்கிரமசிங்கே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story