"வெற்றியை அமைதியாக கொண்டாடிய மக்களுக்கு நன்றி" : கோத்தபய ராஜபக்சே

தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும் அதிபராக இருப்பேன் என கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெற்றியை அமைதியாக கொண்டாடிய மக்களுக்கு நன்றி : கோத்தபய ராஜபக்சே
x
தேர்தல் வெற்றியை தொடர்ந்து, கொழும்பு ராஜகிரியாவில் உள்ள தேர்தல் ஆணைய வளாகத்தில், செய்தியாளர்களை கோத்தபய ராஜபக்சே சந்தித்தார். அப்போது அவர், தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் வெற்றியை பிளாஸ்டிக் மற்றும் பதாகை இல்லாமல் கொண்டாடிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். வாக்களித்த மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவதாகவும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார். இதுபோல, தடைபட்ட தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்