வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு : உயிர்சேதம் ஏதும் இல்லை

இலங்கையில் அதிபர் தேர்தலில் வாக்களிக்க பேருந்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பாகி உள்ளது.
வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு : உயிர்சேதம் ஏதும் இல்லை
x
இலங்கையில் அதிபர் தேர்தலில் வாக்களிக்க பேருந்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பாகி உள்ளது. புத்தளத்தில் இருந்து மன்னார் மாவட்டம் நோக்கி மக்களை ஏற்றி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு மறித்த மர்ம நபர்கள் திடீரென பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். நள்ளிரவு நடைபெற்றதாக கூறப்படும் இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பேருந்தை சோதித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்