"பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் அதிகரிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி
x
பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பிரேசிலியா நகரில், 'பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில்' கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், பிரிக்ஸ் நாடுகளுக்க இடையிலான வர்த்தகத்தை அடுத்த மாநாட்டுக்குள் 36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டும் எனவும் அதற்கான திட்டத்தை வர்த்தக கவுன்சில் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான துறைகளில் வர்த்தக வளர்ச்சி அவசியம் எனவும் மோடி வலியுறுத்தினார். முன்னதாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய அவர், ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு மட்டும் 15 சதவீதம் அளவில் உள்ளதாகவும் இது அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். போதை கடத்தல் மற்றும் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பிரிக்ஸ் நாடுகள் திறமையாக செயல்படு வதாகவும் மோடி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்