பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியா சென்றடைந்தார்.
பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
x
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு, இன்றும் நாளையும் பிரேசிலில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, இந்திய நேரப்படி இன்று பிற்பகலில் பிரேசிலியா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை பிரேசில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.  'பிரிக்ஸ்' மாநாட்டின் இடையே பிரேசில் அதிபர் போல்சோனரோ, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை மோடி தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்