சீனா : கிராமவாசியை அதிசயிக்க வைத்த விநோத கூகை ஆந்தைகள்

சீனாவின் ஜியான்ஜி பகுதியில், லியூ என்ற கிராமவாசி ஒருவர் ஐந்து விநோத உருவம் கொண்ட பறவைகளை கண்டுள்ளார்.
சீனா : கிராமவாசியை அதிசயிக்க வைத்த விநோத கூகை ஆந்தைகள்
x
சீனாவின் ஜியான்ஜி பகுதியில், லியூ என்ற கிராமவாசி ஒருவர் ஐந்து விநோத உருவம் கொண்ட பறவைகளை கண்டுள்ளார். பெரிய கண்களுடன், பார்ப்பதற்கு, குரங்கு போல விநோதமாக காட்சியளித்த அவற்றை கண்டு அதிசயித்த அவர், உடனடியாக வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டார். பின்னர், அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வந்த வனத்துறையினர் அவற்றை ஆய்வு செய்த போது அவை அரிய வகை கூகை ஆந்தைகள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்