இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா துணை நிற்கும் - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா என்றும், மோடியுடன் இருப்பது பெருமையாக உணர்கிறேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா துணை நிற்கும் - அதிபர் டிரம்ப்
x
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நலமா மோடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,   மோடி மிகச்சிறந்த செயல்களை செய்து வருவதாக குறிப்பிட்டார்.   இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். மோடியின் கொள்கையால் 30 கோடி இந்திய மக்கள் வறுமையில் இருந்து மீண்டதாக குறிப்பிட்ட டிரம்ப், மோடி ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது என்றார். இந்திய மக்கள் கடுமையான உழைப்பாளிகள் என்றும் டிரம்ப் கூறினார். ஜனநாயகத்தின் மீது இரு நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன என்றும், இரண்டு நாடுகளின் எண்ணங்களும் ஒரே மாதிரியாக உள்ளன என்றும் கூறினார்.  பிரதமர் மோடிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் அதிபர் டிரம்ப் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்