ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு - 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 30 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு - 30 பேர் பலி
x
ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில்,30 பேர் பலியானார்கள். பர்வான் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அதிபர் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, இதுவரை, எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்