"நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது"

"1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி"
நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது
x
இலங்கையில் பலாலி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்துவதை ஏற்று கொள்ள 
முடியாது என்று  ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் 
பேசிய அவர் , வடக்கு மாகாணத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் உள்ளதாகவும், அவர்களை பலாலியில் குடியேற்றுவதற்காக ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழ் மக்களின் நிலங்களை இராணுவ வசம் வைத்து கொண்டு ராணுவ குடியிருப்புக்களை உருவாக்குவதை ஏற்று கொள்ள முடியாது 
என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்