பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் : ஏலத்தில் விட இலங்கை அரசாங்கம் முடிவு

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறியதால், பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் : ஏலத்தில் விட இலங்கை அரசாங்கம் முடிவு
x
தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற குழு, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை சென்றது. 
கொழும்பில் உள்ள அமைச்சகத்தில் அமைச்சர் திலிப் வெதஆராச்சி - தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு இடையே பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இலங்கை கடற்பரப்பில்  பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள படகுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.  அப்போது, இந்திய மீனவர்களால் மீட்கப்படாத 174 படகுகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதை  இலங்கை அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய இந்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.  படகுகளை விற்பனை செய்யவதன்  மூலம் கிடைக்கும் பணத்தை படகுகளின் உரிமையாளர்களான இந்திய மீனவர்களுக்கே மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்