அமெரிக்கா : சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்த மிசிசிப்பி ஆறு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்த மிசிசிப்பி ஆறு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகளில் வேகமாக பற்றி எரிந்த தீயால், கரும் புகை வெளியேறியது. சுமார் ஒரு மைல் தொலைவு வரை, அடர்த்தியான கரும் புகையின் தாக்கம் இருந்தது. சேதம் மதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், அந்த சரக்கு ரயில் எத்தனால் கொண்டு சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Next Story