ஜம்மு- காஷ்மீர் மாநில விவகாரம் : இந்தியா- பாக். பிரதமர்களுடன் டிரம்ப் பேச்சு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநில விவகாரம் : இந்தியா- பாக். பிரதமர்களுடன் டிரம்ப் பேச்சு
x
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வர்த்தகம், நல்லுறவை வலுப்படுத்துவது, பிராந்திய மேம்பாடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமாக காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை தணிப்பது குறித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். கடினமான சூழல் என்ற போதிலும், மோடி, இம்ரான் கான் ஆகிய இரு நண்பர்களுடனான  உரையாடல் சுமூகமாக நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்