20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய கோயில் : கோயிலை பார்க்க திரளும் ஆயிரக்கணக்கானோர்
தாய்லாந்து நாட்டின் லோப்புரி மாகாணத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய புத்தர் கோயில், வறட்சி காரணமாக வெளியே தெரிவதால், அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டின் லோப்புரி மாகாணத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய புத்தர் கோயில், வறட்சி காரணமாக வெளியே தெரிவதால், அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர். தலையில்லாமல் 13 அடி உயரமுள்ள சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்தும், ஊதுபத்திகள் ஏற்றி வைத்தும் புத்தரை மக்கள் வழிபடுகின்றனர். தாய்லாந்து நாட்டில் நிலவும் வரலாறு காணாத வறட்சி காரணமாக, 3 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் தரிசாக காட்சி அளிக்கிறது.
Next Story