போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துகளைச் சந்தித்த 737 மேக்ஸ் விமானங்கள்
போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிறுவனம் 33 ஆயிரத்து 650 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளன.
போயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த நிறுவனம் 33 ஆயிரத்து 650 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளன. போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ஜெட் விமானங்கள் 5 மாத இடைவெளியில், எத்தியோப்பியாவிலும், இந்தோனேஷியாவிலும் பெரும் விபத்தை சந்தித்தன. அதில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அந்த விமானங்களை இயக்கவும், வாங்கவும் உலக நாடுகள் தடை விதித்துள்ளன. இதன் காரணமாகவும், விமான விபத்துகளுக்கான இழப்பீடுகள் காரணமாகவும் அந்த நிறுவனம் 33 ஆயிரத்து 650 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Next Story