பென்சில்வேனியா மாகாணத்தில் பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பிலடெல்பியா நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியரை துப்பாக்கியால் மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எட்டு பேர் குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக தாக்குதலில் ஈடுபட்டது ஒருவரா அல்லது பலரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
Next Story