தென் மற்றும் மத்திய சீன பகுதியில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 61-ஆக உயர்வு
தென் மற்றும் மத்திய சீன பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
தென் மற்றும் மத்திய சீன பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. பல லட்சம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள், வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. 3 லட்சத்து 56 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக, ஒரு இடத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. கல்லும் மண்ணும் உருண்டு வந்து சாலையை ஆக்கிரமித்த காட்சிகள் பயங்கரமாக இருந்தது.
Next Story