பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்திய ராஜபக்சே
இலங்கையில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
இலங்கையில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து, பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் மறுத்தனர். இதனையடுத்து பள்ளியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. இதனையடுத்து கொழும்பில் உள்ள சில பள்ளிக்கூடங்களுக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராஜபக்சே சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
Next Story