"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

ஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும் - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை
x
ஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, ஈரானிடமிருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தடை விதித்தது. இதனால் இருநாடுகளிடையே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில்  மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெயை அனுப்பும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் அறிவித்தது.  அவ்வழியே சென்ற சவுதி உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்கப்பட்டன. இதையடுத்து அமெரிக்க போர்க்கப்பல் ஈரானுக்கு எதிராக பெர்ஷியன் கடல் பகுதிக்கு சென்றதால் 
அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.    


Next Story

மேலும் செய்திகள்