"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்
இலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, பெருமிதம் தெரிவித்தார்.
இலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, பெருமிதம் தெரிவித்தார். இறுதிப்போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சி, கண்டியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு, உரையாற்றிய ராஜபக்சே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவத்தினர் பெற்றுத் தந்த அமைதியான சூழ்நிலை, பலருக்கு நினைவில்லாமல் போனதாக குறிப்பிட்டார். ராணுவத்தினர் அவர்களுக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்யவில்லை, இலங்கை தேசத்திற்காகவே அதனைச் செய்தார்கள் என்றும் ராஜபக்சே தெரிவித்தார்.
Next Story