கந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்

இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.
கந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்
x
இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. கடிதத்தில், சிலர் இணைந்து நல்லூர் கந்தசாமி கோவிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கோவில் வளாகம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவிலைச் சுற்றி உள்ள ரத வீதிகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. படை வீரர்கள் இருசக்கர வாகனங்களில் துப்பாக்கியுடன் கண்காணித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முழு சோதனைக்கு உட்படுத்திய பின்னரே  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்