சீனாவில் கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் அமூர் மீன்கள்
சீனாவில் ஏரியில் இருந்து ஆறுகளுக்கு இடம்பெயர்ந்து வரும் லட்சக்கணக்கான அமூர் மீன்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
சீனாவில் ஏரியில் இருந்து ஆறுகளுக்கு இடம்பெயர்ந்து வரும் லட்சக்கணக்கான அமூர் மீன்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஆண்டுதோறும் வசந்த காலத்தின் போது இனப்பெருக்கத்திற்காக இவ்வகை மீன்கள், உப்புத்தன்மை மிக்க தாலி ஏரியில் இருந்து ஆற்று நீருக்கு இடம்பெயர்வது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை காட்டிலும் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் மீன்கள் சங்கமிப்பதாக தெரிவிக்கும் மீன் வளத்துறை அதிகாரி, அரசு சார்பில் மீன்கள் இடம்பெயர, இம்முறை செயற்கையான முறையில் கூடுதல் வழித்தடம் அமைத்திருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
Next Story