பயங்கரவாதத்தை அழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - இலங்கை அதிபர் வேண்டுகோள்
இன, மத, அரசியல் என பல பிரிவுகளுக்கு ஆட்படாமல் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தின் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அவர் கலந்துரையாடினார். அப்போது பேசிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இலங்கை நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
Next Story