வெடிகுண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கையில் மாற்றம் - 253 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் : பலி எண்ணிக்கையில் மாற்றம் - 253 பேர் உயிரிழப்பு
x
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி அனில் ஜாங்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் உயிரிழந்தோரின் சடலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால்  துல்லியமாக கணக்கிட முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.  தற்போது  உண்மையான நிலவரம் தெரிய வந்துள்ளதாகவும் அதன்படி அடுத்தடுத்து பல இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் மொத்தம் 253 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 359 பேர் உயிரிழந்ததாக கூறிய நிலையில் தற்போது 253 பேர் மட்டுமே பலியானதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்