அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து

வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை
அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து
x
அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் உள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற பிரசாரம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்போவதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளையடித்தது ராகுல் காந்தியின் குடும்பம் தான் என்று குற்றம்சாட்டி உள்ளார்.ஐபிஎல் தலைவராக இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் மோடி, இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்