ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தம் : நிதி நெருக்கடி காரணமாக தற்காலிக முடிவு

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தம் : நிதி நெருக்கடி காரணமாக தற்காலிக முடிவு
x
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக முன்னணி விமான நிறுவனமாக செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கிறது. அதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விமான சேவைகளை குறைத்து வந்ததுடன், பணியாளர்களுக்கான ஊதியமும் வழங்க முடியாத நிலையில் உள்ளது. தொடர்ச்சியாக  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளை நிறுத்தி வந்த நிலையில் தற்போது முழுமையாக சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்