தாய்லாந்து : யானைகள்-மக்கள் இடையே நீர் சண்டை

தாய்லாந்தில் சாங்க்ரன் என்ற புத்தாண்டு கொண்டாட்டம், தண்ணீர் சண்டையோடு தொடங்கியது.
தாய்லாந்து : யானைகள்-மக்கள் இடையே நீர் சண்டை
x
தாய்லாந்தில் சாங்க்ரன் என்ற புத்தாண்டு கொண்டாட்டம், தண்ணீர் சண்டையோடு தொடங்கியது. இதையொட்டி, 10க்கும் மேற்பட்ட யானைகளின் உடலில் வண்ண மலர்கள் வரையப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. பின்னர் யானைகளும், பொதுமக்களும் மாறிமாறி தண்ணீரை வாரி இறைத்து விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். யானைகள் நடனமாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்தன. மிகவும் பழமையான இந்த நிகழ்வு, மியான்மர், லவொஸ் மற்றும் கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆண்டுதோறும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்