இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு : 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்
இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு : 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
x
இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பப்புவா மாகாணத்தில்  பெய்த பலத்த மழையால், மலை பிரதேசமான செந்தானி என்னும் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டது.கிராமம் முழுவதும் சேற்றுநீர் சூழ்ந்துள்ள நிலையில், நிலச்சரிவு காரணமாக ஆங்காங்கே மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்துள்ளன. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறும் அதிகாரிகள், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்