பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : இடிபாடுகளில் இருந்து 41 பேர் பத்திரமாக மீட்பு

நைஜீரியாவில் பள்ளி கட்டடம் இடித்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் இது வரை 41 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : இடிபாடுகளில் இருந்து 41 பேர் பத்திரமாக மீட்பு
x
லாகோஸில் உள்ள இந்த கட்டடத்தில் மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. கடந்த புதன்கிழமை காலை திடீரென்று கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் 6 வயது சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. லாகோஸ் நகரில் உறுதிதன்மை அற்ற கட்டடங்களை அகற்ற பல முறை உத்தரவு பிறப்பித்தும், நடவடிக்கை எடுக்காததே விபத்துக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்